நல்குணமே இன்முகமே
பனியென பிணி அணைந்து மறையட்டும் !
இனிதென பணி அனைத்தும் சிறக்கட்டும் !
அகத்தினில் இனிமை மலர் மலரட்டும் !
முகத்தினில் இனிமை சுடர் ஒளிரட்டும் !
சொற்களில் இனிமை குளிர் பரவட்டும் !
செயல்களில் இனிமை தளிர் செழிக்கட்டும் !
உயிரிருள் நீக்கும் உயரருள் சேர்க்கும்
நல்குணமே இன்முகமே !
எக்கணமும் இவ்விதமே !
எக்கணமும் இவ்விதமே !
Comments
Post a Comment